Posts

தீவன செலவை குறைக்கும் வழிமுறைகள் துவரை சாகுபடி கழிவுகள்

Image
  துவரை சாகுபடியில் பசும் துவரை செடிகள்  முற்றிய காய்களுடன் அறுவடைக்குப்பின் உலர வைக்கப்பட்டு பின்பு தரையில் அடித்து உலர்ந்த காய்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன.  இதில் உலர்ந்த இலைகள் ,சிறு சிறு குச்சி கூளங்கள் கழிவாக கிடைக்கின்றன. துவரை இலைகள் புரத சத்து நிறைந்த தீவனம் ஆகும் துவரை இலைகளில் புரத சத்து 11-17%வரை உள்ளது. NDF நார் 46.6%, ADF நார்33.3%,கொழுப்பு சத்து2.70%,கரையும் மாவு சத்து 48.5% வரை உள்ளது உள்ளது .  செம்மறி ஆடுகளுக்கும் உலர்ந்த துவரை இலைகள் நல்ல தீவனம் ஆகும் . செம்மறி ஆடுகளுடன் ஒப்பிட்டால் வெள்ளாடுகளுக்கு இந்த இலைகளின் செரிமான அளவு , செரிக்க கூடிய ஊட்ட சத்துக்களின் அளவு வளர்சிதை மாற்றங்களுக்கு பயன்படும் எரிச்சத்து போன்றவை அதிகம் கிடைக்கும்  துவரை இலைகள் மிகுந்த செரிமானம் கொண்டது.  பொதுவாக துவரை இலைகளை பிற வேளாண் கழிவுகளுடன் சேர்த்து தீவனம் அளித்தால் மொத்த தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும் . துவரை இலை தீவனத்தில் அதில் உள்ள இலைகள் மற்றும் சிறு சிறு கிளைகள் மற்றும் உடைந்த பருப்புகளின் அளவைப் பொறுத்து அதில்  உள்ள ஊட்ட சத்துக்கள் மற்றும் அவற்...

அதிகம் பால் தரும் மாடுகளை வைத்திருக்கும் பண்ணையாளர்கள் கவனிக்க வேண்டியவை

Image
  கறவை மாடுகளில் தினமும்  15 லிட்டருக்கு மேல் பால் தருபவைகளும் எருமைகளில்  தினசரி  12 லிட்டருக்கு மேல் பால் தருபவைகளும் “அதிகம் பால் தருபவை” என்ற வரையறைக்குள் வரும். உடல் கட்டு (Body Condition Score) குறைந்து மாடுகள் உடல் மெலிதல்: அதிகம் பால் தரும் கறவை மாடுகளுக்கு  கன்று ஈன்ற முதல் நூறு நாட்களில் (முன் கறவை காலம்)  பால் உற்பத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தீவனம் மூலம் ஈடுகட்ட இயலாது.  இந்த  ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஈடுகட்ட உடலில் இருக்கும் தசைகள் பயன் படுத்தப்படுவதால் மாடுகளின் உடல் மெலிந்து உடல் கட்டு ( BCS )குறைய ஆரம்பிக்கும்.  மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க உடல் கட்டு குறையும் . உடல் கட்டு குறைய குறைய தசைகள் மூலம் பால் உற்பத்திக்கு கிடைக்கும் ஊட்ட சத்துக்கள் குறைந்து அதனால் படிப்படியாக பால் உற்பத்தியும் குறையும் . அழற்சி பிரச்சனைகள்: “அதிகம் பால் தரும் கறவை   மாடுகளின்”  உச்சகட்ட  பால்சுரப்பின் பொழுது, தீவனம் உட்கொள்வதில் உச்சகட்ட பசி இன்மை ,எரிச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் அவை எப்பொழுதும் ஒருவி...

மாடுகளுக்கு கழிவு செய்யப்பட்ட காய்கறிகள் கொண்ட தீவனம் அளித்து தீவன செலவை குறையுங்கள்

Image
  காய்கறிகள் விளையும் இடங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பும் பொழுது, விற்பனைக்கு தகுதியற்ற காய்கறிகள், போக்குவரத்தில்  சேதமாகும் காய்கறிகள் ,மொத்த மற்றும் சில்லறை கடைகளில் விற்பனை ஆகாத காய்கறிகள் கழிவாக கிடைக்கின்றன. இந்த கழிவுகள் சுற்றுச் சூழலுக்கு பெருமளவு குந்தகம் விளைவிக்கின்றன. தரையில் வீசப்பட்ட காய்கறி மற்றும் பழ கழிவுகளை உட்கொண்ட ஆடு மாடுகளில் கழிச்சல் மற்றும் வயிறு சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.. இப்படி கழிக்கப்படும் காய்கறிகளில் உள்ள ஊட்ட சத்துக்களில் புரத சத்து 7.0 – 15.0% வரையும், நார் சத்து  8-16% வரையும், சாம்பல் சத்து 10.0-20.05  வரையும் , கரையும் மாவு சத்து 40.0-50.0 % வரையும்   கழிக்கப்படும் காய்கறிகளில் இருக்கும் காய்கறி வகைகளை பொறுத்து மொத்த கழிவுக் கலவையின் ஊட்ட சத்துக்கள் மாறுபடுகின்றன. காய்கறி கழிவில் உள்ள ஊட்ட சத்துக்கள் பருவ காலங்களை பொறுத்தும் மாறுபடும். கோடை காலத்தில் கிடைக்கும் காய்கறி கழிவுகளின் புரதம்  (14 -17%)மற்றும் மொத்த செரிக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களின் அளவு ( 63-67% ) ஏறத்தாழ கோதுமை தவிடு மற்றும் உலர்ந்த நி...

மாடுகளுக்கு கழிவு செய்யப்பட்ட காய்கறிகளை அளித்து தீவன செலவை குறையுங்கள்

Image
  காய்கறிகள் விளையும் இடங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பும் பொழுது விற்பனைக்கு தகுதியற்ற காய்கறிகள் , போக்குவரத்தில் சேதமாகும் காய்கறிகள் ,மொத்த மற்றும் சில்லறை கடைகளில் விற்பனை ஆகாத காய்கறிகள் சில காய்கறிகளின் இலை பகுதி போன்றவை கழிவாக கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகள் சுற்றுச் சூழலுக்கு பெருமளவு குந்தகம் விளைவிக்கின்றன. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மட்டும் மாதத்திற்கு 70 டன்னுக்கு மேல் காய்கறிகள் சேதமடைகின்றன. இப்படி கிடைக்கும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு பசும் தீவனத்திற்கு மாற்றாக ஓரளவு பயன் படுத்தி தீவன செலவை குறைக்க முடியும். இப்படி கழிக்கப்படும் காய்கறிகளில் உள்ள ஊட்ட சத்துக்களில் புரத சத்து7.0 – 15.0 % வரையும், நார் சத்து 8-16%வரையும், சாம்பல் சத்து10.0-20.05 வரையும் , கரையும் மாவு சத்து 40.0-50.0 % வரையும் இருக்கும் ஊட்ட சத்துக்களின் அளவில் மாற்றங்கள்: கழிக்கப்படும் காய்கறிகளில் இருக்கும் காய்கறி வகைகளை பொறுத்து மொத்த கழிவுக் கலவையின் ஊட்ட சத்துக்கள் மாறுபடுகின்றன. காய்கறி கழிவில் உள்ள ஊட்ட சத்துக்கள் பருவ காலங்களை பொறுத்தும் மாறுபடும். தண்ணீரில் நன்கு கழுவ ...

கரும்பு வேளாண்மையுடன் கறவை மாடுகளை இணைத்து பால் உற்பத்தியை பெருக்குங்கள்

Image
  கரும்பு தோகையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏறத்தாழ நெல் வைக்கோல், சோளத்தட்டை, கேழ்வரகு தாள் போன்ற வேளாண் கழிவுகளில் உள்ள சத்துக்களின் அளவை ஒத்துள்ளன. பசும்புல்லை விட கரும்பு தோகையில் புரத சத்து மற்றும் கரையும் மாவு சத்துக்கள் குறைவாக உள்ளன ஓரிரு இளம் கரும்பு கணுக்கள் கொண்ட கரும்புதோகையை தீவனமாக அளித்தால் மாடுகள் விரும்பி உட்கொள்ளும் . சுமார் 350 கிலோ எடைகொண்ட ஒரு கலப்பின மாடு நாள் ஒன்றுக்கு 13- 15 கிலோ வரை பசும் கரும்புதோகையை உட்கொள்ளும் பசும் புல்லுடன் ஒப்பிட்டால் பசும் கரும்பு தோகையில் செரிமானம் குறைந்தே உள்ளது . பசும்புல்லுடன் ஒப்பிட்டால் பசும் தோகையில் புரத செரிமானம் 44% மும் கொழுப்பு செரிமானம் 24%- மும், கரையும் மாவு சத்து செரிமானம் 20%-மும் குறைவாக உள்ளன பசும் கரும்பு  தோகை மட்டும் உட் உட்கொண்டால் … இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் மாடுகளின் உடல் எடையை தக்கவைத்துக் கொள்ள கூட போதாது. பல சமயங்களில் மாடுகள் உடல் எடையை இழக்க கூட நேரிடும்  மாடுகளின் உடலில் இருந்து சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் வெளியேறும். அதனால் பசும் கரும்பு  தோகை தீவனத்துடன் சுண்ணாம்பு...

மரவள்ளிக்கிழங்கு சாகுபடியுடன் கறவை மாடுகளை இணையுங்கள் - பகுதி 3

Image
  மரவள்ளி இலை சைலேஜை மாடுகளுக்கு அளித்தால் ஏற்படும் நன்மைகள் ஒரு ஆய்வில் பசும் புல்லுடன் தினமும்  3 –4  கிலோ மரவள்ளி இலை சைலேஜை கலப்பு தீவனத்துடன் அளித்த பொழுது  மாடுகள் 8 கிலோ வரை பால் அளித்தன மற்றொரு ஆய்வில் மாடுகளுக்கு புல்லையும் மரவள்ளி  சைலேஜையும் தனித்தனியே அளித்தபொழுது மாடுகள் புல்லை விட மரவள்ளி சைலேஜை விரும்பி அதிகம் உட்கொண்டன மாடுகளுக்கு இந்த சைலேஜை கூடுதலாக அளித்த பொழுது தினசரி  பால்  உற்பத்தி  12.4  கிலோவிலிருந்து 13.2 கிலோவாக அதிகரித்ததாகவும் தெரியவந்தது. இது மற்றுமின்றி பாலில் கொழுப்பு சத்தும்  SNF ம் சற்று அதிகரித்தது மாடுகள் மற்றும் இன்றி ஆடுகளுக்கும் மரவள்ளி சைலேஜ் நல்ல தீவனம் ஆகும் ஆடு  மாடுகளுக்கு அவற்றின் உடல் எடையில் சுமார் 3% வரை மரவள்ளி சைலேஜ் அளிக்கலாம்  கால்நடைகள் இதை உண்ண பழகுவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஒரு வார காலம் வரை இதை சிறிது சிறிதாக கொடுத்து பழக்குவது நல்லது.  ஒரு ஆய்வில் கறவை மாடுகளுக்கு தினசரி மரவள்ளி இலை  சைலேஜ் கூடுதலாக அளித்த சமயம் பால் உற்பத்தி பாலில் கொழுப்பு SNF சத்துக்கள் அதிகர...

மரவள்ளிக்கிழங்கு சாகுபடியுடன் கறவை மாடுகளை இணையுங்கள் - பகுதி 2

Image
  மரவள்ளி இலை சைலேஜ்: சுமார் 3 - 5 மாத வயதிற்கு மேல் உள்ள இலைகளில் இந்த நச்சின் அளவு சற்றே குறைந்திருக்கும். இருப்பினும் உலரவைத்த பசும் இலைகள் அல்லது சைலேஜ் முறையில் பதப்படுத்தப்பட்ட இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம் . மரவள்ளி கிழங்கு அறுவடையின் பொழுது காம்புடன் உள்ள இலைகள் மற்றும் செடியின் நுனியில் உள்ள மிக இளம் தண்டுகளை கொண்டு சைலேஜ் தயாரிக்கலாம். இம் முறை மூலம் 78 முதல் 80 சதவீத அளவிற்கு ஹைட்ரோ சயனிக் அமில நச்சு குறையும். அத்துடன் இலைகளின் பசுமை தன்மை மாறாமல் ஊட்டச்சத்துக்களும் ஓரளவு இயல்பான நிலையிலேயே இருக்கும். சைலஜை கீழ்கண்ட முறைகளில் தயாரிக்கலாம். மரவள்ளி கிழங்கு தொழிற்சாலைகளில் ஈரக்கழிவைகழிவாகக்கழிவை கொண்டு பதப்படுத்தும் (Silage) முறைகள்:   1. ஈரக்கழிவு காம்புடன் உள்ள இலைகள் மற்றும் செடியின் நுனியில் உள்ள மிக இளம் தண்டுகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவேண்டும். நல்ல காற்றோட்டமான நிழலான இடத்தில ஒரு நாள் இரவு வரை பரப்பி நன்கு வாட வைத்து ஈரப்பதத்தை 40% - 45% அளவிற்கு குறைக்க வேண்டும் வழக்கமான வெல்லப்பாகுக்கு பதிலாக மரவள்ளி ஈர கழிவை பயன்படுத்தவேண்டும். வா...