அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 3
கன்று ஈன்ற மாடுகளின் இடைப்பட்ட மற்றும் பின் காலங்களின் விவரங்கள்! முன்கறவை காலத்தில் பால் உற்பத்தி குறைவதை காட்டிலும் மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி மேலும் குறையும். இவ்வாறு குறையும் காலங்களில் மாட்டிற்கு எவ்வாறு தீவன பராமரிப்பை அளிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். கன்று ஈன்று 100-200 நாட்கள் வரை கிடைக்கும் பால் சுரப்பு காலம் மத்திய கறவை காலம் எனப்படும். ஒரு ஈத்தில் சுரக்கும் மொத்த பாலில் சுமார் 30-40% வரை இந்த காலகட்டத்தில் பெறலாம். இந்த கால கட்டத்தில் தான் மாடுகள் மீண்டும் சினையாகும் . மேலும் கால்நடை நோய்களுக்கான ஆலோசனைக்கு 063837 17150 -இல் அழைக்கவும். கன்று ஈன்ற மாடுகளின் இடைப்பட்ட காலத்தில் பால் உற்பத்தி குறையுமா? மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி குறைவதால் பால் சுரப்பிற்கான எரிச்சத்து தேவை குறைந்தாலும் இந்த கால கட்டத்தில் மாட்டின் கர்ப்பத்தில் வளரும் கன்றுக்கு எரிச்சத்து தேவைப்படுவதால் இந்த காலகட்டத்தில் எரிச்சத்து அதிகமாகவும் புரத சத்து சற்று குறைந்த தீவனம் ...