Posts

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கறவை மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 3

Image
கால்நடை வளர்ப்பில் லாபத்தை தீர்மானிக்க மிக முக்கியமானது தீவன மேலாண்மை ஆகும். மாடுகளின் ஆரோக்கியம்,  பால் உற்பத்தி  திறன் மற்றும் இனப்பெருக்க சுழற்சி சீராக இருக்க வேண்டுமானால், முறையான ஊட்டச்சத்து அளிப்பது அவசியமாகிறது. இந்த பகுதியில், மருத்துவர்கள் பரிந்துரைத்த தீவன முறைகள் மற்றும் கன்று ஈனும் காலங்களில் பின்பற்ற வேண்டிய நுணுக்கமான பராமரிப்பு முறைகளை பற்றி விரிவாகக் காண்போம்.   கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து முறைகளை தெரிந்து பண்ணையை இலாபகரமாக நடந்த +91 6383717150 யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை அழைக்கவும். பசுந்தீவன மேலாண்மை மாடுகளுக்கு அளிக்கக்கூடிய புல் மிகவும் முற்றியதாகவோ அல்லது மிகவும் இளம் புல்லாகவும் இருக்கக்கூடாது. வல்லுநர்கள் பரிந்துரைத்த அறுவடை இடைவெளியில் அறுவடை செய்த புல்லாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட புல் வகைகளை கலந்து அளிக்க வேண்டும். காலையில் அறுவடை செய்த புல்லை மாலை வரை வாடவைத்து அளிக்கக்கூடாது. நீங்கள் அளிக்கும் மொத்த நார் தீவனத்தில்: தரமான புல் கலவை: 50-60% பயறுவகையை சேர்ந்த வேலிமசால் போன்றவை: 25-30% தீவன மர இலைகள்: 10-15% அளிக்க வேண்டும். அ...

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 2

Image
ஒரு பண்ணையின் வெற்றி என்பது அங்குள்ள கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே அமைகிறது. நோய்த்தொற்றுகள் ஏற்படும் காலங்களில் முறையான ஊட்டச்சத்து வழங்கப்படாததே பல நேரங்களில் பெரும் இழப்புகளுக்கு காரணமாகிறது. இதனை கருத்தில் கொண்டு, டாக்டர் முருகன் ஐயா அவர்களின் ஆலோசனையின் படி, கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை தீவனங்கள் மூலம் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த முக்கியத் தகவல்களை விரிவாக காண்போம். உங்கள் கால்நடை பண்ணையை ஆரோக்கியமாக வழிநடத்தவும், கூடுதல் ஆலோசனைகளை பெறவும் யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை  +91 6383717150 அழைக்கவும். 1. எளிதில் செரிக்கக்கூடிய அதிக எரிச்சத்து கொண்ட தீவனம் மாடுகள் நோய் கிருமிகளால் தாக்கப்படும் பொழுது அவற்றின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்களை ஊக்கம் பெற செய்ய வேண்டும். இதற்கு பெருமளவில் எரிச்சத்து தேவைப்படுகின்றது. நோய் கிருமிகளை நோய் எதிர்ப்பு செல்கள் எதிர்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை 1°C அதிகரித்தாலே உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் எரிச்சத்தில் 10-15% வரை கூடுதலாகப் பயன்பட்டுவிடும். இதனால் நோய்வாய்ப்படும்...

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 1

Image
ஒரு விவசாயியின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் மிக முக்கியமான அங்கமாகும். " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பது நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கும் பொருந்தும். பொதுவாக, மாடுகள் நோய்வாய்ப்படும்போது மருத்துவ செலவுகள் அதிகரிப்பதோடு, பால் உற்பத்தியும் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. கால்நடைகளுக்குத் தேவையான எரிச்சத்து, புரதம் மற்றும் தாதுச்சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்காதபோது, அவற்றின் உடலில் இயல்பாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்குகிறது. குறிப்பாக, கறவை மாடுகள் மற்றும் சினை மாடுகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, தேவையற்ற அழற்சியை உண்டாக்கி, நோய்க்கிருமிகள் எளிதில் தொற்ற வழிவகுக்கிறது. எனவே, பண்ணைப் பராமரிப்பில் மருத்துவச் செலவுகளைக் குறைத்து, பால் உற்பத்தியை நிலைநிறுத்த, கால்நடைகளின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற சரியான ‘ தீவனம் மேலாண்மை' பற்றிய தகவல்களுக்கு யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +91 6383717150 இல் அழைக்கவும். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி - பண்ணை இழப்பிற்கான முக்கிய காரணம் கால்நடைகளுக்கு அளிக்கப்படும்...

மழைக்காலத்தில் தீவன மேலாண்மை - பால் உற்பத்தி குறையாமல் பாதுகாப்பது எப்படி? பாகம் 2

Image
  மழைக்காலம் வந்துவிட்டால், மாடுகளுக்கு நோய்த்தொற்று அபாயம் அதிகரிக்கும், பசுந்தீவனத்தில் நார்ச்சத்துக் குறையும், கொட்டகையில் ஈரம் கூடும். இதனால் பால் உற்பத்தி குறைவதுடன், கொழுப்புச் சத்து குறைவு, உண்ணிகள், குடல் புழுக்கள், மற்றும் அமிலத்தன்மை போன்ற பல சவால்கள் உருவாகும். உங்கள் உழைப்பு வீணாகாமல், பால் உற்பத்தியை 100% பாதுகாப்பது எப்படி , சரியான தீவனத்தை எப்படித் தேர்வுசெய்து பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ள உங்கள் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். 📞 உடனடி இலவச ஆலோசனை +91 6383717150 மாடுகளின் மேய்ச்சல் & பச்சை தீவன மேலாண்மை இளம் புற்கள் அதிகமுள்ள மேய்ச்சலிடத்தில் நார் சத்து குறைவு ஏற்படும் மேய்ச்சல் முடிந்தவுடன் வைக்கோல் , ராகி தாள், மதுபான தனியக்கழிவு போன்ற நார் சத்து அதிக உணவுகள் அளிக்கவும் மழைக்காலத்தில் பயறு வகை பசும்புல் மாடுகள் விரும்பாமல் இருக்கும் அதனால் புரதம் நிறைந்த பிண்ணாக்குகளை சேர்க்க வேண்டும் மழைக்காலத்தில் 15-25% அதிகமாக பசும்புல் இடவும் புல்லை ஒரு அங்குலத்திற்கும் குறைவாக நறுக்கி அளிக்க வேண்டும் சுண்ணாம்பு & பாஸ்பரஸ் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள...

மழைக்காலத்தில் தீவன மேலாண்மையில் ஏன் அதிக கவனம் தேவை? பாகம் 1

Image
கால்நடை வளர்ப்பு லாபகரமாக இருக்க , தீவனத்தின் தரம் மிக அவசியம். ஆனால், மழைக்காலம் வரும்போது, பசுந்தீவனங்களின் சத்துக்களும், அவற்றின் உண்ணும் தகுதியும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. மழை நீரின் விளைவாகப் புற்களில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஊட்டச்சத்து இழப்பைத் தடுப்பதற்கும், பூஞ்சை அபாயத்தில் இருந்து உங்கள் கால்நடைகளைக் காப்பதற்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் பண்ணையின் பால் உற்பத்தித்திறன் குறையாமல் இருக்க, மழைக்காலத்தில் தீவனங்களை நிர்வகிப்பது மற்றும் சேமிப்பது குறித்த அத்தியாவசிய தகவல்களை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். உங்கள் பண்ணை குறித்த ஆலோசனைகள் மற்றும் தரமான தீவன சேமிப்பு வழிகாட்டுதல்களுக்கு இப்போதே எங்களை அழைக்கவும்: +91 6383717150 1. மழை காரணமாக புற்களில் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பு மழைக்காலத்தில் தீவனத்தின் ஊட்டச்சத்து மதிப்பு ஏன் குறைகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மழையில் நனைந்த புற்களில் உள்ள மிக முக்கியமான சத்துக்கள் நீருடன் வெளியேறி விடுகின்றன. சத்துக்கள் வெளியேறுதல்: புல்லில் உள்ள சர்க்கரைச் சத்து, கொழுப்புச் சத்து மற்றும் தாதுச் சத்துக்கள் அன...

குடற்புழு நீக்கத்திற்கு முன் மற்றும் பின் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்-பாகம் 2

Image
மழைக்காலங்களில் கால்நடைகள் குடற்புழு தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு அதிகம் ஆளாகின்றன. இதனால் கால்நடைகளின் உடல் எடை குறைதல், பால் உற்பத்தி வீழ்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே குடற்புழு நீக்கத்தை சரியான முறையில் செய்து, முன்பும் பின்பும் தேவையான பராமரிப்புகளை வழங்குவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவர் ஆலோசனைக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 📞 +91 6383717150 குடற்புழு நீக்கம் செய்யும் முன் பராமரிப்பு முறைகள் மழை காலங்களில் ஆடுகள், மாடுகள் அதிக அழற்சியில் இருப்பதால் தீவன மேலாண்மையை மிகுந்த நிதானத்துடன் செய்யப்பட வேண்டும். இந்த காலங்களில் கால்நடைகள் எளிதில் பயப்படக்கூடிய அழற்சி நிலையில் இருப்பதால், சத்தம் போடுதல், ஓடவிடுதல், அடித்தல் போன்றவற்றைத் தவிர்த்து நிதானமாக கையாள வேண்டும். குடற்புழு நீக்க மருந்தை காலை வேளையில், அவை தீவனம் உண்ணும் முன் அளிப்பது சிறந்தது. குடற்புழு நீக்கம் எப்போதும் கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் செய்வது நல்லது . குடற்புழு நீக்கம் செய்த பிறகு செய்யவேண்டியவை...

மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மூன்று கட்டங்களிலும் செய்ய வேண்டிய வழிமுறைகள்-பாகம் 1

Image
மழை காலங்களில் குடற்புழுக்கள் அதிகரிக்கும் காரணம் மழை காலங்களில் கால்நடைகளுக்கு குடற்புழுக்கள் தாக்கம் அதிகமாகும். இதனால் அவற்றில் அழற்சி (inflammation) மற்றும் உடல் சோர்வு ஏற்படும். குடற்புழுக்களால் பாதிக்கப்பட்ட ஆடுகள், மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது அவற்றின் சாணத்துடன் புழுக்களின் முட்டைகளும் வெளியேறும். இந்த முட்டைகள் மழை பெய்யும்போது ஏற்படும் ஈரப்பதம் மற்றும் வெயில் குறைவான சூழலில் லார்வா (larva) என்ற சிறிய புழுக்களாக மாறுகின்றன. இந்த லார்வாக்கள் புல் தண்டின் மீது 2 முதல் 4 அங்குல உயரம் வரை ஒட்டிக்கொண்டு காணப்படும். மழை காலங்களில் குடற்புழு நீக்கம் பற்றிய தகவல்களுக்கு +91 6383717150 இல் யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ குழுவை அழைக்கவும். லார்வாக்கள் எப்படி கால்நடைகளை தாக்குகின்றன? கால்நடைகள் அந்த புல்லை மேயும் போது, லார்வாக்கள் புற்களுடன் அவற்றின் வயிற்றுக்குள் சென்று இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இது ஜீரண பிரச்சனை, உடல் பலவீனம், மற்றும் இரத்தசோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக வளர்ந்த மாடுகளை விட கன்றுகள், கிடாரிகள், குட்டிகள் போன்ற இளம் கால்நடைகளே அதிகம் பாதிக்கப...