Posts

Showing posts with the label தீவனம்

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 2

Image
ஒரு பண்ணையின் வெற்றி என்பது அங்குள்ள கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே அமைகிறது. நோய்த்தொற்றுகள் ஏற்படும் காலங்களில் முறையான ஊட்டச்சத்து வழங்கப்படாததே பல நேரங்களில் பெரும் இழப்புகளுக்கு காரணமாகிறது. இதனை கருத்தில் கொண்டு, டாக்டர் முருகன் ஐயா அவர்களின் ஆலோசனையின் படி, கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை தீவனங்கள் மூலம் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த முக்கியத் தகவல்களை விரிவாக காண்போம். உங்கள் கால்நடை பண்ணையை ஆரோக்கியமாக வழிநடத்தவும், கூடுதல் ஆலோசனைகளை பெறவும் யுவர்பார்ம் இலவச மருத்துவ குழுவை  +91 6383717150 அழைக்கவும். 1. எளிதில் செரிக்கக்கூடிய அதிக எரிச்சத்து கொண்ட தீவனம் மாடுகள் நோய் கிருமிகளால் தாக்கப்படும் பொழுது அவற்றின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்களை ஊக்கம் பெற செய்ய வேண்டும். இதற்கு பெருமளவில் எரிச்சத்து தேவைப்படுகின்றது. நோய் கிருமிகளை நோய் எதிர்ப்பு செல்கள் எதிர்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை 1°C அதிகரித்தாலே உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் எரிச்சத்தில் 10-15% வரை கூடுதலாகப் பயன்பட்டுவிடும். இதனால் நோய்வாய்ப்படும்...

மழைக்காலத்தில் தீவன மேலாண்மையில் ஏன் அதிக கவனம் தேவை? பாகம் 1

Image
கால்நடை வளர்ப்பு லாபகரமாக இருக்க , தீவனத்தின் தரம் மிக அவசியம். ஆனால், மழைக்காலம் வரும்போது, பசுந்தீவனங்களின் சத்துக்களும், அவற்றின் உண்ணும் தகுதியும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. மழை நீரின் விளைவாகப் புற்களில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஊட்டச்சத்து இழப்பைத் தடுப்பதற்கும், பூஞ்சை அபாயத்தில் இருந்து உங்கள் கால்நடைகளைக் காப்பதற்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் பண்ணையின் பால் உற்பத்தித்திறன் குறையாமல் இருக்க, மழைக்காலத்தில் தீவனங்களை நிர்வகிப்பது மற்றும் சேமிப்பது குறித்த அத்தியாவசிய தகவல்களை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். உங்கள் பண்ணை குறித்த ஆலோசனைகள் மற்றும் தரமான தீவன சேமிப்பு வழிகாட்டுதல்களுக்கு இப்போதே எங்களை அழைக்கவும்: +91 6383717150 1. மழை காரணமாக புற்களில் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பு மழைக்காலத்தில் தீவனத்தின் ஊட்டச்சத்து மதிப்பு ஏன் குறைகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மழையில் நனைந்த புற்களில் உள்ள மிக முக்கியமான சத்துக்கள் நீருடன் வெளியேறி விடுகின்றன. சத்துக்கள் வெளியேறுதல்: புல்லில் உள்ள சர்க்கரைச் சத்து, கொழுப்புச் சத்து மற்றும் தாதுச் சத்துக்கள் அன...