Posts

Showing posts from April, 2026

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 5

Image
மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் ,பொது பராமரிப்பு ,மாடுகளின் வயது, கன்று ஈன்ற பருவம் , ஈத்துக்களின் எண்ணிக்கை போன்றவைகள் மாடுகளில் பால் கொடுக்கும் நாட்களையும், பால் உற்பத்தியையும் பாதிக்கும்.இவைகளை தாண்டி மேலும் பால் சுரப்பு குறைவதற்கு எவையெல்லாம் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இலவச கால்நடை ஆலோசனைக்கு +91 6383717150 -இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். சத்து பற்றாக்குறையால் பால் உற்பத்தி குறையுமா? மாட்டின் மடியில் நீண்டநேரம் பால் தேங்கி இருந்தால் அதன் மூலம் மடியில் பாலால் ஏற்படும் அழுத்தம் அதிகரித்து பால் சுரப்பு குறைந்துவிடும். தேவைக்கு அதிகமாக தீவனம் மூலம் அளிக்கப்படும் எரிச்சத்து கொழுப்பாக மாற்றப்பட்டு பால் மடியில் படியும் .இப்படி படியும் கொழுப்பு பால் சுரப்பிகளின் திறனை குறைப்பதால் பால் சுரப்பு குறையும் கிடாரிகளை வளர்ப்பவர்கள் கிடாரிகள் விரைவில் பருவம் அடைந்து சினை பிடிக்க வேண்டி தேவைக்கு அதிகமாக தீவனம் இட்டு கொழுக்க வைப்பது சாதாரணமாக நடக்க கூடியது .இப்படி கொழுக்க வைப்பதால் கிடாரிகளில் பால் மடி வளர்ச்சி அடைந்துகொண்டிரு...

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 4

Image
                                 முன்கறவை , மத்தியகறவை, மற்றும் பின்கறவை காலங்களில் பொதுவாக கன்று ஈன்ற மாடுகளில் காலத்தை பொறுத்து பால் உற்பத்தி குறையும். அனால் இந்த காரணங்களை தாண்டியும் சில முக்கிய காரணங்கள் பால் உற்பத்தி குறைய பெரும் பங்கு வகிக்கிறந்து. அவை என்ன என்ன காரணங்கள் என்று இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.மேலும் இலவச கால்நடை ஆலோசனைக்கு 063837 17150 -இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைய காரணங்கள்:  பால் வற்றும் நாட்கள்: கறவை மாடுகளுக்கு 40-60 நாட்கள் பால் வற்றவிடவேண்டும் . இந்த சமயத்தில் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மை காரணமாக உடல் எடை கூடவேண்டும் .மத்திய கறவையின் பின்பகுதி பின்கறவை காலம் மற்றும் பால் வற்றிய காலங்களில் கூடும் உடல் எடை தான் அடுத்த ஈத்தின் முன்கறவை காலத்தில் பால் சுரப்புக்கு தேவையான எரிச்சத்தை அளிக்கும். இந்த பால் வற்றும் நாட்கள் குறைந்தால் மாடுகளில் பால் சுரப்பு குறைந்துவிடும். அதே சமயயம் 60 நாட்களுக்கு மேல் பால் வற்றாவிட...

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 3

Image
           கன்று ஈன்ற மாடுகளின் இடைப்பட்ட மற்றும் பின் காலங்களின்  விவரங்கள்! முன்கறவை காலத்தில் பால் உற்பத்தி குறைவதை காட்டிலும் மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி மேலும் குறையும். இவ்வாறு குறையும் காலங்களில் மாட்டிற்கு எவ்வாறு தீவன பராமரிப்பை அளிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். கன்று ஈன்று 100-200 நாட்கள் வரை கிடைக்கும் பால் சுரப்பு காலம் மத்திய கறவை காலம் எனப்படும். ஒரு ஈத்தில் சுரக்கும் மொத்த பாலில் சுமார் 30-40% வரை இந்த காலகட்டத்தில் பெறலாம். இந்த கால கட்டத்தில் தான் மாடுகள் மீண்டும் சினையாகும் . மேலும் கால்நடை நோய்களுக்கான ஆலோசனைக்கு 063837 17150 -இல் அழைக்கவும். கன்று ஈன்ற மாடுகளின் இடைப்பட்ட காலத்தில் பால் உற்பத்தி குறையுமா? மத்திய கறவை மற்றும் பின் கறவை காலங்களில் பால் உற்பத்தி குறைவதால் பால் சுரப்பிற்கான எரிச்சத்து தேவை குறைந்தாலும் இந்த கால கட்டத்தில் மாட்டின் கர்ப்பத்தில் வளரும் கன்றுக்கு எரிச்சத்து தேவைப்படுவதால் இந்த காலகட்டத்தில் எரிச்சத்து அதிகமாகவும் புரத சத்து சற்று குறைந்த தீவனம் ...