சூரியகாந்தி பிண்ணாக்கில் மாடுகளின் பால் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் உள்ளதா?
.png)
சூரியகாந்தி பிண்ணாக்கில் மாடுகளின் பால் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் உள்ளதா?
◆ மேல் தோல் முழுமையாக நீக்கப்படாத பிண்ணாக்கு அல்லது மேல் தோல் முழுவதுமாக நீக்கப்பட்ட பிண்ணாக்கை மாடுகளின் கலப்பு தீவனத்தில் சேர்த்தால் பால் உற்பத்தியில் எந்த மாறுதலும் இருக்காது.◆ இந்த பிண்ணாக்கில் மாடுகளின் பால் உற்பத்திக்கு தேவையான மெத்தியோனின் அமினோ அமிலம் அதிகமாக இருக்கும். பிற பிண்ணாக்குகளை விட சூரியகாந்தி பிண்ணாக்கு கடினமானதாக இருக்கும். இந்த பிண்ணாக்கை தண்ணீரில் ஊறவைத்து அளிக்க கூடாது. மாறாக அரைத்து தீவனத்தில் சேர்க்க வேண்டும்.
◆ மேல் தோல் நீக்கப்படாத சூரியகாந்தி பிண்ணாக்க்கு தான் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது.
◆ இந்த பிண்ணாக்கில் முதல் வயிற்றில் செரிக்கும் புரதம் 55%, 45% உள்ளன.
◆ அதாவது 30% புரத சத்து கொண்ட சூரியகாந்தி பிண்ணாக்கில் முதல் வயிற்றில் செரிக்கும் புரதம் 165 கிராமும், சிறுகுடலில் செரிக்கும் பைபாஸ் புரதம் 136 கிராமும் உள்ளன.
பைபாஸ் புரத அளவை அதிகரிக்க …
◆ செக்கில் ஆட்டி இந்த பிண்ணாக்கு தயாரிக்கப்படும் பொழுது உண்டாகும் வெப்பம் காரணமாக இதில் உள்ள புரத சத்தின் கரையும் திறன் குறைந்து UDP அளவு அதிகரிக்கும்.◆ இதில் உள்ள பைபாஸ் புரத அளவை அதிகரிக்க பார்மால்டிஹைடு
( Formaldehyde ) என்ற இரசாயனத்தை சேர்க்கும் தொழில் நுட்பம் உள்ளது.
◆ இந்த பிண்ணாக்கின் புரதத்தில் பால் உற்பத்திக்கு தேவையான மெத்தியோனின் என்ற அமினோ அமிலம் பிற பிண்ணாக்குகளை விட சற்று அதிகம் ( 100 கிராம் புரத சத்தில் 2.3 கிராம்) உள்ளது.
◆ அதே சமயம் பாலுற்பத்திக்கு தேவையான மற்றொரு அமினோ அமிலமான லைசின் பிற பிண்ணாக்குகளை விட சற்று குறைந்த ( ( 100 கிராம் புரத சத்தில் 3.53 கிராம்) உள்ளது.
◆ சூரியகாந்தி பிண்ணாக்கில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் சத்து மற்றும் உயிர் சத்து “B” நிறைந்துள்ளது. இந்த பிண்ணாக்கில் நார் மற்றும் லிக்னின் அளவு அதிகம் உள்ளதால் செரிமான திறனும் எரிச்சத்தின் அளவும் சோயா பிண்ணாக்கில் இருப்பதை விட குறைவாகவே உள்ளது.
◆ சூரியகாந்தி பிண்ணாக்கில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு பெருமளவில் வேறுபடுவதால் இதில் உள்ள ஊட்ட சத்துக்களின் அளவை அறுதி இட்டு கூற முடியாது.
◆ செக்கில் ஆட்டப்பட்ட பிண்ணாக்கை பயன்படுத்துங்கள்.
◆ செக்கில் ஆட்டப்பட்ட பிண்ணாக்கில் எண்ணெய் அளவு சற்று அதிகம் இருந்ததால் வெண்ணெய் மிக மிருதுவாக இருக்கும்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
மாடுகளுக்கு மக்காச்சோள பூசா தீவனம் அளித்து தீவனச் செலவை குறைக்கலாம்
கோதுமை தவிடு பற்றி தெரிந்து கொண்டு தரமான தவிடை வாங்கி தீவன செலவை குறையுங்கள்
Comments
Post a Comment