பால் உற்பத்தியை இயற்கையாக உயர்த்த மரவள்ளி இலை ஒரு சிறந்த தீர்வா?
பசுக்களின் பால் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்க மரவள்ளி இலையை தீவனமாக பயன்படுத்தும் பாதுகாப்பான மற்றும் எளிய முறையை தெரிந்துகொள்ள, யூவர்பார்ம் மருத்துவ குழுவை +91 63837 17150 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.
மரவள்ளி இலைகள் – ஒரு நச்சற்ற பசுமை தீவன சக்தி!
மரவள்ளி கிழங்கு என்பது தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படும் முக்கிய வேளாண் பயிராகும். இது சேலம், நாமக்கல், விழுப்புரம், தர்மபுரி, கன்னியாகுமாரி, கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சுமார் 1.96 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 38.81 லட்சம் டன் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகிறது.
அறுவடையின் போது கிழங்குடன் கூட 9-10 டன் வரை மரவள்ளி இலைகளும் கிடைக்கின்றன. பொதுவாக இலைகள் வயலில் நிராகரிக்கப்படும்; ஆனால் சரியான முறையில் செயல்படுத்தினால், இவை உயர்தர புரதச்சத்து நிறைந்த கால்நடை தீவினமாக பயன்படுத்த முடியும்.
மரவள்ளி இலை – பசுமை தீவனமாக ஏன் முக்கியம்?
மரவள்ளி இலைகளில் உலர்ந்த அடிப்படையில் 16% முதல் 40% வரை புரதச்சத்து உள்ளது.
இதில் 72% செரிமானமடையும் புரதம், மற்றும் 8.3% Digestible Crude Protein (DCP) ஜீரணிக்கக்கூடிய கச்சா புரதம் உள்ளது.
பை-பாஸ் புரதம் அதிகமாக உள்ளதால், உயர்தர பால் தரும் மாடுகளுக்கு சிறந்த தீவனமாக உள்ளது.
சுண்ணாம்பு சத்து அதிகம் காணப்படுவதால், பால் மூலம் இழக்கும் சுண்ணாம்பை ஈடுசெய்ய உதவுகிறது.
இதன் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தரம், குதிரை மசாலா போன்ற பொருட்களுக்கு ஈடாக இருக்கிறது.
மரவள்ளி இலைகளில் உலர்ந்த அடிப்படையில் 16% முதல் 40% வரை புரதச்சத்து உள்ளது.
இதில் 72% செரிமானமடையும் புரதம், மற்றும் 8.3% Digestible Crude Protein (DCP) ஜீரணிக்கக்கூடிய கச்சா புரதம் உள்ளது.
பை-பாஸ் புரதம் அதிகமாக உள்ளதால், உயர்தர பால் தரும் மாடுகளுக்கு சிறந்த தீவனமாக உள்ளது.
சுண்ணாம்பு சத்து அதிகம் காணப்படுவதால், பால் மூலம் இழக்கும் சுண்ணாம்பை ஈடுசெய்ய உதவுகிறது.
இதன் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தரம், குதிரை மசாலா போன்ற பொருட்களுக்கு ஈடாக இருக்கிறது.
ஹைட்ரோ சயனிக் அமிலம் – பாதுகாப்பாக நீக்கும் வழிகள்
மரவள்ளி இலைகளில் ஹைட்ரோசியானிக் அமிலம் (HCN) எனும் நச்சு உள்ளது. இதனை நீக்க சில எளிய முறைகள்:
முற்றிய இலைகளை மட்டும் பயன்படுத்தல்
வெயிலில் நன்கு உலர்த்துதல் (Drying)
சைலேஜ் முறையில் பதப்படுத்துதல் (Silage method)
சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்துதல்
மரவள்ளி இலைகளை எப்படி மற்றும் எவ்வளவு அளிக்க வேண்டும்?
உலர்த்திய இலைகளை மாட்டின் எடையின் 0.5%–0.8% அளவுக்கு தினசரி அளிக்கலாம்.
உதாரணம்: 300 கிலோ எடை கொண்ட மாட்டிற்கு 1.5 – 2.5 கிலோ வரை
இலைகளுடன் Phosphorus மற்றும் Sulfur போன்ற தாது சத்துக்களும் சேர்க்க வேண்டும்.
தீவனத்துடன் சிறிது சிறிதாக பழக்கப்படுத்துவது அவசியம்.
உலர்த்திய இலைகளை மாட்டின் எடையின் 0.5%–0.8% அளவுக்கு தினசரி அளிக்கலாம்.
உதாரணம்: 300 கிலோ எடை கொண்ட மாட்டிற்கு 1.5 – 2.5 கிலோ வரை
இலைகளுடன் Phosphorus மற்றும் Sulfur போன்ற தாது சத்துக்களும் சேர்க்க வேண்டும்.
தீவனத்துடன் சிறிது சிறிதாக பழக்கப்படுத்துவது அவசியம்.
மரவள்ளி இலை தீவனத்தின் பயன்கள்
நாட்டுமாடுகளுக்கு தினசரி 600-700 கிராம் மரவள்ளி உலர்ந்த இலை, வைக்கோலுடன் சேர்த்து அளித்தால் மொத்த தீவன செரிமானம் அதிகரிக்கும்.
பசுமை தீவனத்தில் 50% வரை மரவள்ளி இலை சேர்த்தபோதும் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் SNF அளவில் மாற்றமில்லை.
பசுமை தீவனத்திற்கு மாற்றாக, மரவள்ளி இலை மக்காசோளம், பருத்தி பிண்ணாக்கு போன்றவற்றுக்குப் பதிலாக சிறந்த தேர்வாகும்.
ஆய்வில் தெரியவருவது போல, மரவள்ளி இலை சேர்த்த கலப்பு தீவனங்கள் பால் உற்பத்தியை 4.4% முதல் 5.0% வரை அதிகரிக்கச் செய்துள்ளன.
நாட்டுமாடுகளுக்கு தினசரி 600-700 கிராம் மரவள்ளி உலர்ந்த இலை, வைக்கோலுடன் சேர்த்து அளித்தால் மொத்த தீவன செரிமானம் அதிகரிக்கும்.
பசுமை தீவனத்தில் 50% வரை மரவள்ளி இலை சேர்த்தபோதும் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் SNF அளவில் மாற்றமில்லை.
பசுமை தீவனத்திற்கு மாற்றாக, மரவள்ளி இலை மக்காசோளம், பருத்தி பிண்ணாக்கு போன்றவற்றுக்குப் பதிலாக சிறந்த தேர்வாகும்.
ஆய்வில் தெரியவருவது போல, மரவள்ளி இலை சேர்த்த கலப்பு தீவனங்கள் பால் உற்பத்தியை 4.4% முதல் 5.0% வரை அதிகரிக்கச் செய்துள்ளன.
Comments
Post a Comment