Posts

Showing posts from December, 2025

ஆரோக்கியமான கால்நடை பராமரிப்பு: கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தீவன மேலாண்மை பாகம் 1

Image
ஒரு விவசாயியின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் மிக முக்கியமான அங்கமாகும். " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பது நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கும் பொருந்தும். பொதுவாக, மாடுகள் நோய்வாய்ப்படும்போது மருத்துவ செலவுகள் அதிகரிப்பதோடு, பால் உற்பத்தியும் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. கால்நடைகளுக்குத் தேவையான எரிச்சத்து, புரதம் மற்றும் தாதுச்சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்காதபோது, அவற்றின் உடலில் இயல்பாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்குகிறது. குறிப்பாக, கறவை மாடுகள் மற்றும் சினை மாடுகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, தேவையற்ற அழற்சியை உண்டாக்கி, நோய்க்கிருமிகள் எளிதில் தொற்ற வழிவகுக்கிறது. எனவே, பண்ணைப் பராமரிப்பில் மருத்துவச் செலவுகளைக் குறைத்து, பால் உற்பத்தியை நிலைநிறுத்த, கால்நடைகளின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற சரியான ‘ தீவனம் மேலாண்மை' பற்றிய தகவல்களுக்கு யுவர்பார்ம் உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு +91 6383717150 இல் அழைக்கவும். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி - பண்ணை இழப்பிற்கான முக்கிய காரணம் கால்நடைகளுக்கு அளிக்கப்படும்...

மழைக்காலத்தில் தீவன மேலாண்மை - பால் உற்பத்தி குறையாமல் பாதுகாப்பது எப்படி? பாகம் 2

Image
  மழைக்காலம் வந்துவிட்டால், மாடுகளுக்கு நோய்த்தொற்று அபாயம் அதிகரிக்கும், பசுந்தீவனத்தில் நார்ச்சத்துக் குறையும், கொட்டகையில் ஈரம் கூடும். இதனால் பால் உற்பத்தி குறைவதுடன், கொழுப்புச் சத்து குறைவு, உண்ணிகள், குடல் புழுக்கள், மற்றும் அமிலத்தன்மை போன்ற பல சவால்கள் உருவாகும். உங்கள் உழைப்பு வீணாகாமல், பால் உற்பத்தியை 100% பாதுகாப்பது எப்படி , சரியான தீவனத்தை எப்படித் தேர்வுசெய்து பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ள உங்கள் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். 📞 உடனடி இலவச ஆலோசனை +91 6383717150 மாடுகளின் மேய்ச்சல் & பச்சை தீவன மேலாண்மை இளம் புற்கள் அதிகமுள்ள மேய்ச்சலிடத்தில் நார் சத்து குறைவு ஏற்படும் மேய்ச்சல் முடிந்தவுடன் வைக்கோல் , ராகி தாள், மதுபான தனியக்கழிவு போன்ற நார் சத்து அதிக உணவுகள் அளிக்கவும் மழைக்காலத்தில் பயறு வகை பசும்புல் மாடுகள் விரும்பாமல் இருக்கும் அதனால் புரதம் நிறைந்த பிண்ணாக்குகளை சேர்க்க வேண்டும் மழைக்காலத்தில் 15-25% அதிகமாக பசும்புல் இடவும் புல்லை ஒரு அங்குலத்திற்கும் குறைவாக நறுக்கி அளிக்க வேண்டும் சுண்ணாம்பு & பாஸ்பரஸ் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள...

மழைக்காலத்தில் தீவன மேலாண்மையில் ஏன் அதிக கவனம் தேவை? பாகம் 1

Image
கால்நடை வளர்ப்பு லாபகரமாக இருக்க , தீவனத்தின் தரம் மிக அவசியம். ஆனால், மழைக்காலம் வரும்போது, பசுந்தீவனங்களின் சத்துக்களும், அவற்றின் உண்ணும் தகுதியும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. மழை நீரின் விளைவாகப் புற்களில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஊட்டச்சத்து இழப்பைத் தடுப்பதற்கும், பூஞ்சை அபாயத்தில் இருந்து உங்கள் கால்நடைகளைக் காப்பதற்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் பண்ணையின் பால் உற்பத்தித்திறன் குறையாமல் இருக்க, மழைக்காலத்தில் தீவனங்களை நிர்வகிப்பது மற்றும் சேமிப்பது குறித்த அத்தியாவசிய தகவல்களை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். உங்கள் பண்ணை குறித்த ஆலோசனைகள் மற்றும் தரமான தீவன சேமிப்பு வழிகாட்டுதல்களுக்கு இப்போதே எங்களை அழைக்கவும்: +91 6383717150 1. மழை காரணமாக புற்களில் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பு மழைக்காலத்தில் தீவனத்தின் ஊட்டச்சத்து மதிப்பு ஏன் குறைகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மழையில் நனைந்த புற்களில் உள்ள மிக முக்கியமான சத்துக்கள் நீருடன் வெளியேறி விடுகின்றன. சத்துக்கள் வெளியேறுதல்: புல்லில் உள்ள சர்க்கரைச் சத்து, கொழுப்புச் சத்து மற்றும் தாதுச் சத்துக்கள் அன...