மழைக்காலத்தில் பண்ணை பராமரிப்பு எப்படி? – கன்றுகள் முதல் தொழுவம் வரை!

மழைக்காலத்தில் மாடுகள் பாதுகாப்புக்கு தேவையான பராமரிப்பு, தீவன மற்றும் நோய் தடுப்பு வழிமுறைகள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள +916383717150 இல் யூவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். மழைக்காலம் என்பது இயற்கைக்கு வாழ்வொளி தரும் பருவமாக இருந்தாலும், மாடுகளின் உடல்நலத்திற்கும் பண்ணை மேலாண்மைக்கும் பல்வேறு சவால்களை ஏற்படுத்தும். மழை நீர், ஈரப்பதம், நோய்கள், தீவன சிக்கல்கள், வண்டிகள் தொல்லை என பல பிரச்சனைகள் மாடுகள், கன்றுகள், கிடாரிகள் போன்ற அனைத்து கால்நடைகளையும் பாதிக்கக்கூடியது. இப்பதிவில் மழைக்காலங்களில் பண்ணையில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தீவன மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு குறித்து விரிவாக காணலாம். 1. தொழுவ மேலாண்மை மற்றும் சுகாதாரம் மழை தொழுவத்தில் தேங்கி நிறைந்தால் சாணம், சிறுநீர், மழைநீர் கலந்து அமோனியா வாயு உருவாகும். இது மாடுகள் மற்றும் கன்றுகளில் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கி, தீவன உட்கொள்ளும் அளவை குறைக்கும். தொழுவ தரை ஈரமாக இருந்தால் கன்றுகளில் காக்சீடியா, கறவை மாடுகளில் மடி நோய் போன்ற நோய்கள் உருவாகும். தொழுவத்தின் நீர் வடிகால் சரி...